மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டி – 04.08.2024

தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் 04.08.2024 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், 2023-2024 கல்வியாண்டில் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர் நெ. மனாசே பிராங்ளினும், மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற 7ஆம் வகுப்பு மாணவர் ப.மணிகண்டனும் மாண்புமிகு விளையாட்டுத் துறை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெருமக்களின் கரங்களிலிருந்து பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.